குருணாகல் மேயர் மீது கை வைப்பதை கனவில் மட்டுமே காணமுடியும்-ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருணாகல் மாவட்டத்தின் தலைவராக தான் இருக்கும் வரையில் குருணாகல் மாநகர மேயர் துஷார சஞ்ஜீவின் தலை முடியில் கூட கை வைக்க இடமளிக்க போவதில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் தொல்லியல் முக்கியத்துவமிக்க அரச மண்டபம் இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து வௌளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

குருணாகல் மேயர் துஷார சஞ்ஜீவ மீது கை வைக்கக் கூடிய காலம் தற்போது முடிந்து விட்டது. தற்போது அது குறித்து கனவு மாத்திரமே காண முடியும் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது புவனேகபாகு மன்னனின் அரச மண்டபம் என கருதப்படும் கட்டிடம் ஒன்றை இடித்ததாக குருணாகல் மாநகர மேயருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கியை காட்டி ஒருவரை கடத்திச் சென்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கிய துஷார சஞ்ஜீவவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதுடன் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். குருணாகல் மேயர், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் நெருங்கிய சகா எனக் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!