முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பணம், புடவை கொடுத்த அரசியல் கட்சி!

மன்னாரில் அரசியல் கட்சி ஒன்று முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பணமும் பரிசுப் பொருட்களும் வழங்கியமை தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் அரசியல் கட்சி ஒன்று கடந்த 17ம் திகதி முன்பள்ளி ஆசிரியர்களை அழைத்து தங்களது பிரச்சார நடவடிக்கையினை மேற்கொண்டமை மற்றும் ஆசிரியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் பணமும் ஒரு புடவையும் வழங்கியுள்ளதாக மன்னார் தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. இது தொடர்பிலேயே குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!