சம்பந்தனுடன் இந்திய துணைத் தூதுவர் சந்திப்பு!

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன் நேற்று முன்தினம் திருகோணமலைக்குச் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

திருகோணமைலையில் உள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று முன்தினம் மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் இந்திய தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

அதேவேளை, நிலாவெளியில் உள்ள விடுதி ஒன்றில், நேற்று முன்தினம் இரவு மேலும் சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.இது வழக்கமாக அரசியல் கட்சிகளுடன் நடைபெறும் சந்திப்பே என்று இராஜதந்திர வட்டாரங்கள் கூறியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!