நேற்று 22 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 22 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதையடுத்து, இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, 2752 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 14 பேர் சவூதி அரேபியாவில் இருந்து திரும்பியவர்கள் என்றும், 7 பேர் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து திரும்பியவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கந்தகாடு முகாம் தொற்றாளருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!