விமல் வீரவன்ச தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் – முஜிபுர்

விமல் வீரவன்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,

“வேட்பாளரோ அல்லது நாட்டின் எந்தவொரு பிரஜையும் தாம் விரும்புவதைப் போன்று முத்திரை வெளியிட முடியாது. அது சட்டத்துக்கு முரணானதாகும்.

எனவே இவ்வாறான சட்ட விரோத செயலில் ஈடுபட்டுள்ள விமல் வீரவன்சவும் இந்த சம்பவத்தில் அவருடன் தொடர்புடைய நபர்களும் உனடியாக கைது செய்யப்பட வேண்டும்.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!