அரந்தலாவை படுகொலை – பிக்குவின் மனு விசாரணைக்கு ஏற்பு!

அரந்தலாவையில் 33 பிக்குகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடும் காயங்களுடன் தப்பிய பிக்கு ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைமீறல் மனுவின் விசாரணை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்காவின் உயர்நீதிமன்றம் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது.

இந்த படுகொலையில் தொடர்புடைய தற்போது உயிருடன் இருக்கும் தீவிரவாதிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று கோரி அன்டௌல்பத்த புத்தசார என்ற பிக்குவே மனுவை தாக்கல் செய்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!