கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் போத்தல் வீசி தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்தில் இனந்தெரியாத நபர்களால் போத்தல் வீசப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுழிபுரம் கல்விளான் பகுதியில் நேற்று இரவு நடந்த கூட்டத்தின் போதே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பிரச்சார கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் பேசிக் கொண்டிருக்கும் போதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களோடு மக்களாக பிரச்சார கூட்டத்தின் கலந்து கொண்ட சிலர் இத்தாக்குதல் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இத்தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!