சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு மறியல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சட்டவிரோதமாக சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு வசதிவாய்ப்பு ஏற்படுத்தியமை, சிறைச்சாலைக்குள் போதைபொருள் விநியோகித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சிறைச்சாலை கண்காணிப்பாளர் காலிங்க கலுவக்கல்லவை 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் 4 பேரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சிறைக் கண்காணிப்பாளர் காலிங்க நேற்று (24) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகிருந்தார்.

இந்நிலையில் இன்று நீர்கொழும்பு பதில் நீதிவான் முன்பு முன்னிலைப்படுத்திய போதே இந்த விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!