காலி சிறைச்சாலையில் கைதிக்கு கொரோனா!

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காலி சிறைச்சாலையில் உள்ள 20 கைதிகளுக்கும், 20 அதிகாரிகளுக்கும் நேற்று பிசிஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

காலி சிறைச்சாலையில் இருந்து சேனபுர தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு கைதிகளில் ஒருவருக்கே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணியகம் தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளான குறித்த நபர் ஏற்கனவே வெலிக்கடைச் சிறைச்சாலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்தே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலி சிறைச்சாலையில் உள்ள 200 கைதிகளுக்கும் 20 சிறை அதிகாரிகளுக்கும் நேற்று பிசிஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!