பச்சைப்புல்மோட்டையில் புலிகளின் வெடிபொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, பச்சைப்புல்மோட்டை பகுதியில், போரின் போது புதைக்கப்பட்ட 10 கிலோ நிறை கொண்ட கிளேமோர் குண்டு உள்ளிட்ட பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் ஆனந்தபுரம் கிராமத்தில் காணி ஒன்றை துப்பரவு செய்யும் போது நிலத்தில் புதைந்து காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருள் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதற்கமைய நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு குறித்த பகுதி வெடிபொருட்கள் அகற்றும் சிறப்பு அதிரடிப்படையினரால் நேற்றுக் காலை தோண்டப்பட்டது.

இதன்போது பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு நிலத்திற்குள் புதைக்கப்பட்ட நிலையிலிருந்த, 10 கிலோ நிறையுடைய கிளேமோர் குண்டு ஒன்று, 109 மிதிவெடிகள், வெடிமருந்து 1.5 கிலோ கிராம் மற்றும் வெடிபொருளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் அழிப்பதற்காக, விசேட அதிரடிப்படையினர் கொண்டு சென்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!