வாக்களிப்பு குறையும்!

பொதுத் தேர்தலில் வாக்களிப்பு குறைவாக இருக்கும் என்று தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளரான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் சூழலால் அதிகளவு வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்வதை தவிர்க்கக் கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 83சத வீத வாக்குப்பதிவு இருந்த போதும், இம்முறை பொதுத் தேர்தலில் மிக குறைந்தளவு வாக்குகளே பதிவாகும் வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவலினால் கணிசமான முதியவர்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்றும், அதேவேளை, தெரிவு செய்வதற்கு இருக்கின்ற வாய்ப்புகள் குறித்த ஏமாற்றத்தினாலும் பலர் வாக்களிப்பை தவிர்க்க நினைக்கின்றனர் என்றும் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!