லங்காபுரவில் தனிமைப்படுத்தப்பட்ட 325 பேரின் பிசீஆர் சோதனை முடிவு இன்று!

பொலன்னறுவ- லங்காபுர பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 325 பேர் தொடர்பான பிசீஆர் பரிசோதனை முடிவுகள் இன்றுவெளியிடப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

லங்காபுர பிரதேச செயலாளர் அலுவலக ஊழியர் ஒருவர் நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டார்.

இதற்கு முன்னர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களான இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளானர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவரே நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!