தெமட்டகொட வீட்டில் சிக்கிய 3 பில்லியன் ரூபா பெறுமதியான டொலர், பணம் சிக்கியது!

தெமட்டகொட பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வீடொன்றில் இருந்து ஒரு இலட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் 30 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டிக்கக் கூடும் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட பணத்தின் இலங்கைப் பெறுமதி சுமார் 3 பில்லியன் ரூபா வரை இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!