லங்காபுரவில் தொடரும் கொரோனா!

பொலன்னறுவ – லங்காபுர பிரதேச செயலகத்தல் பணியாற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்காபுர பிரதேச செயலகத்தைச் சேர்ந்த இருவருக்கு சில நாட்களுக்கு முன்னதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.இதையடுத்து,பிரதேச செயலக பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனைகளின் போதே, சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலன்னறுவ மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் குமாரவன்ச தெரிவித்துள்ளார்.

லங்காபுர பிரதேச செயலகத்தில் உள்ள அனைத்து பணியாளர்கள் உள்ளிட்ட 980 பேருக்கு பிசிஆர் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், லங்காபுர பிரதேச செயலகத்தில் 11 பேருக்கு இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, நேற்றுக் காலை 6 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் எவருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், நேற்று 7 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2822 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!