எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அன்றைய தினம் புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கான சுப நேரம் உள்ளதாக துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
எனினும் அமைச்சரவை நியமனத்திற்கு முன்னர் பிரதமர் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டம் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரம் இடம்பெறவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!