வாக்கெண்ணத் தொடங்கும் நேரம் அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6ம் திகதி 07 மணி அல்லது 08 மணிக்குத் தொடங்கும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்காளர்களின் வாக்களிக்கும் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80 விகிதமாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!