நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் கடமைகளில் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஈடுபடவிருப்பதால் வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் 8ம் திகதி இந்த செயற்பாடு மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!