பசில் கொலைச் சதி என்பது தேர்தல் குண்டு! – ஒப்புக்கொண்டார் பிரதமர்

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதுாக க வெளியான தகவல் தேர்தல் குண்டு என்பதை பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாத்தறை மாவட்ட வேட்பாளருமான லக்ஸ்மன் யாபா அபேவர்தன அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் பசில் மீதான கொலை சதித்திட்டம் குறித்த தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச, லக்ஸ்மன் யாபா மாத்தறை மாவட்டத்தில் தோல்வியடைந்து விடுவார் என்ற அச்சத்தினால் இப்படியான போலித் தகவலை வெளியிட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!