பாதுகாப்பான தேர்தல் நடந்தமைக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

கொரோனா தொற்று உலகில் காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலை நடத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை உள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராபஜக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறை மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டிவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தலில் 70 வீதமானோர் வாக்களித்துள்ளமைக்கு மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!