உள்ளத்தின் உறுத்தல்களை உதறி விட்டு மக்களுக்காக உழைப்போம்!

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ள சசிகலா ரவிராஜ் உள்ளத்தின் உறுத்தல்களை உதறி எறிந்துவிட்டு நாம் எல்லோரும் தூர தரிசனத்தோடு மக்களுக்காக உழைப்போம் என்று கூறியுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில்,

“எனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கும், எனது வெற்றிக்காக உழைத்த ஆதரவாளர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகள்!

வெற்றி பெற்றிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் சிறீதரன் சித்தார்த்தன் உட்பட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

பாராளுமன்ற தேர்தலுக்கு அப்பாலும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் மக்களை ஆறுதல்படுத்தவும் ஆற்றுப்படுத்தவும் வேண்டிய தேவைகள் பல உள. அதனை முன்னெடுக்க எதிர் காலத்தில் நான் முயற்சி செய்வேன்! தாங்களும் உங்களால் இயன்ற சேவையை கரிசனையோடு முன்னெடுக்க எனது உளப்பூர்வமான வாழ்த்துதல்கள்!

உள்ளத்தின் உறுத்தல்களை உதறி எறிந்துவிட்டு நாம் எல்லோரும் தூர தரிசனத்தோடு மக்களுக்காக உழைப்போம்! என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!