கப்பம் கோரிய சண்டியர் மேர்வின் சில்வாவின் மகன்; கைது செய்ய நடவடிக்கை!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவை கைது செய்ய பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேர்வின் சில்வாவின் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக பிரபல வர்த்தகர் ஒருவரிடம் பணம் கோரி தொந்தரவு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மாலக சில்வா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தலங்கம பொலிஸார் நேற்று (10) மாலக சில்வாவை கைது செய்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றிருந்த வேளை அவர் வீட்டில் இருக்கவில்லையென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!