சரியாக செயற்பட்டிருப்பின் பல்லாயிரக் கணக்கானேரை காப்பாற்றியிருக்கலாம் – எரிக் சொல்ஹெய்ம்

நோர்வே முன்னெடுத்த சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்று இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான சமாதான தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

எரிக் சொல்ஹெய்ம் என்கின்ற இந்த நபர் முன்னர் விடுதலைப்புலிகளுக்கு பாரியவருமானத்தை வழங்குபவராகவும், ஊட்டச்சத்தினை வழங்குபவராகவும் பராமரிப்பாளராகவும் விளங்கியவர் தற்போது இவர் ஒரு சூழல் செயற்பாட்டாளரா என பெரும்பான்மையின நபர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்து டுவிட் செய்துள்ள சொல்ஹெய்ம், இந்த நபர் (தான்) சமாதானத்தை ஊக்குவிப்பதற்கான பாடுபட்டவர், நாங்கள் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப்ப புலிகளிடமிருந்து கிடைத்த அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட்டோம்.

நாங்கள் இந்தியாவுடனும் சமாதான முயற்சிகளை ஆதரித்த ஏனையவர்களுடனும் நெருக்கமாக இணைந்து செயற்பட்டோம். நாங்கள் வெற்றியடைந்திருந்தால் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்” – எனவும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!