மரணச் சடங்கில் வெடி கொளுத்தியவர்களை தாக்கிய இராணுவத்தினர்!

மன்னார் – மாந்தை மேற்கு சன்னார் கிராமத்தில் மரணச்சடங்கில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது இராணுத்தினர் துப்பாக்கியினால் கடுமையாக தாக்கியுள்ளளனர். உயிரிழந்த ஒருவரின் சடலம் தகனக் கிரிகைகளுக்காக பொது மாயனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் ஒருவரின் இறுதிக் கிரிகைகளுக்காக சடலம் அவரது இல்லத்தில் இருந்து விடத்தல் தீவு பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பள்ளமடு சந்தியூடாக சடலம் கொண்டு செல்லப்பட்ட போது பட்டாசு கொழுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் பள்ளமடு சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மரணச்சடங்கில் கலந்து கொண்டிருந்த சுமார் 7 பேர் மீது இராணுத்தினர் துப்பாக்கியினால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதன் போது 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து பள்ளமடு வைவத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!