நாடாளுமன்றம் செல்ல பிள்ளையானுக்கு அனுமதி!

முன்னாள் எம்பி ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் விளக்கமறியல் கைதியாக உள்ளவரும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தெரிவான எம்பியுமான பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் 9வது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்ற மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதி கோரிய மனுவக்காக நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பிள்ளையானை மீளச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் போது “விரைவில் விலங்கினை உடைத்து வெளியில் வருவேன்” என்று ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!