கோவிட்-19: தமிழகத்தில் ஒரே நாளில் 121 பேர் பலி – மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது!

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் புதிதாக 65 ஆயிரத்து 75 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,445 ஆண்கள், 2,264 பெண்கள் என மொத்தம் 5,709 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 11 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 225 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 763 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,182 பேரும், திருவள்ளூரில் 489 பேரும், கோவையில் 392 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 9 பேரும், தர்மபுரியில் 8 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 38 லட்சத்து 45 ஆயிரத்து 803 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 654 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 953 ஆண்களும், 1 லட்சத்து 38 ஆயிரத்து 672 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 16 ஆயிரத்து 834 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 44 ஆயிரத்து 470 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 89 பேர், தனியார் மருத்துவமனையில் 32 பேர் என 121 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 11-ந் தேதி உடல்நல குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நேற்று உயிரிழந்தவர்களில் சென்னையில் 24 பேரும், சேலத்தில் 8 பேரும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கன்னியாகுமரியில் தலா 7 பேரும், வேலூரில் 6 பேரும், கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூரில் தலா 5 பேரும், கடலூரில் 4 பேரும், மதுரை, கள்ளக்குறிச்சியில் தலா 3 பேரும், நெல்லை, தென்காசி, ராணிப்பேட்டை, ராமநாதபுரம், நாமக்கல், நாகப்பட்டினம், ஈரோடு, அரியலூரில் தலா இருவரும், திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், விருதுநகரில் தலா ஒருவரும் என 33 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 6 ஆயிரத்து 7 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 850 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,097 பேரும், தேனியில் 446 பேரும், செங்கல்பட்டில் 465 பேரும் அடங்குவர். இதுவரையில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 787 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 53 ஆயிரத்து 860 பேர் உள்ளனர். தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 884 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 752 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 909 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேரும் என மொத்தம் 6 ஆயிரத்து 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!