ஷானியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகரவை தொடர்ந்தும் செப்டம்பர் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன மெண்டிஸையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இருவரையும் இன்று (20) கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!