விசாரணைக்கு வர முடியாது! – வீட்டுக்கு வரச் சொல்கிறார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தன்னால் குறித்த பொலிஸ் பிரிவிற்கு ஆஜராக முடியாது எனவும் கொழும்பில் உள்ள தனது வீட்டிற்கு வந்து வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

எனவே ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குறித்த தினத்தில் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!