இன்று முதல் மின்வெட்டு இல்லை!

நாடு முழுவதும் அமுல் செய்யப்பட்டு வந்த மின்வெட்டு இன்றுடன் நீக்கப்படுவதாக, இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை தேசிய மின்வழங்கல் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினால், நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சாரத் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் இருந்து தேசிய மின் விநியோக கட்டமைப்புக்கான மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், கடந்த 17ஆம் திகதியில் இருந்து, பகலில் 1 மணி நேரமும், இரவில் ஒன்றேமுக்கால் மணி நேரமும் மின்வெட்டு அமுல் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது மின் விநியோக கட்டமைப்பில் நிலைமைகள் சீரடைந்துள்ளதால், இன்று தொடக்கம் மின்வெட்டு நீக்கப்படுவதாக இலங்கை மின்சார சபைத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!