காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நாள் போராட்டத்துக்கு விக்கியின் கூட்டணியும் ஆதரவு!

??????????????????????????????????????????????????????????
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம்திகதி வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நடாத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணிகளுக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள செய்தியில்,

“பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் நாட்டில் அசூர பலத்துடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில் தமிழ் மக்கள் தமக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டிய அவசியமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் 30ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தின போராட்ட நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்படும்போது தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைப்பது சாத்தியமாகும். அதனால், சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கான ஏற்பாடுகளை சாத்தியமான எல்லா வழிகளையும் பயன்படுத்தி மேற்கொள்ளுமாறு ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவற்றை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த போராட்டங்களில் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களை முழுமையான ஆதரவு வழங்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.” – என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!