முடிவின்றி முடிந்த ஐதேக செயற்குழுக் கூட்டம்!

தேசிய பட்டியல் ஆசனம் மற்றும் கட்சி தலைமை குறித்து எந்த முடிவும் எட்டப்படாமலே ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நிறைவடைந்துள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று இடம்பெற்றது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் தொடர்பான முடிவும், முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய கட்சியின் தலைமையை ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவித்தமை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருந்தது.

இருப்பினும் எவ்வித முடிவும் எட்டப்படாமலேயே கட்சியின் செயற்குழுக் கூட்டம் நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!