யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் குறித்த அறிவிப்பு இன்று!

யாழ்ப்பாணம் மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை தெரிவு செய்வதற்கான புதிய நியமங்கள், நடைமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக கோரப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தெரிவுகள் இடம்பெற்று மூவர் முன்மொழியப்பட்டார்கள்.

குறித்த இரு பல்கலைக்கழகங்களதும் தெரிவுகள் அடங்கிய பரிந்துரைகள் ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இரு பல்கலைக்கழகங்களதும் துணைவேந்தர் தெரிவுகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், இன்று இதுகுறித்த உத்தியோக பூர்வ அறிவித்தல் அனுப்பி வைக்கப்படலாமென ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!