20 ஆவது திருத்தச்சட்டமூலம் செப்டம்பர் 3 ஆம் திகதி அமைச்சரவையில்..

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் செப்டம்பர் 3 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே நீதி அமைச்சர் அலிசப்ரி மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமைப்பதற்காகவே 20 முன்வைக்கப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!