கொரோனா தொற்று! இலங்கையின் நிலவரம் குறித்து வெளியாகியுள்ள தகவல்

இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை இருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,988 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,842 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 134 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!