இதுவரை 3101 பேருக்கு கொரோனா!

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 4 பேருக்கும்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!