‘காக்கி சீருடைக்கான மரியாதையை ஒருபொழுதும் இழக்காதீர்கள்’ – காவலர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

JAPAN-INDIA/
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியில் இளம் ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரிகளிடம் காணொலி காட்சி வழியே பிரதமர் மோடி இன்று உரையாடினார். இதன்பின் அவர்கள் முன் பிரதமர் மோடி பேசும்பொழுது, உங்களது காக்கி சீருடையின் அதிகாரத்தினை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு பதிலாக அதனை அணிந்து கொள்வதில் நீங்கள் பெருமை கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம். உங்களுடைய காக்கி சீருடைக்கான மரியாதையை ஒருபொழுதும் இழக்காதீர்கள் எனக் கூறினார்.

போலீஸ் அதிகாரிகள் பணியில் சேரும்பொழுது, ஒவ்வொருவதும் நம்மை கண்டு பயப்பட வேண்டும். குறிப்பிடும்படியாக நமது ஏரியா ரவுடிகள் அனைவரும் பயப்பட வேண்டும் என நினைக்கின்றனர் என்று கூறினார். நடிகர் சூர்யா நடிப்பில் சிங்கம் படம் வெளிவந்து பின்னர் இந்தியிலும் அதேபெயரில் படமெடுக்கப்பட்டது. இந்தியில் நடிகர் அஜய் தேவ்கன் நாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் நேர்மை தவறாத மற்றும் கடமையில் இருந்து விலகாத போலீஸ் அதிகாரியாக நாயகன் வேடம் அமைந்திருக்கும். இதனை சுட்டி காட்டி பிரதமர் மோடி பேசும்பொழுது, சிங்கம் போன்ற படங்களை பார்த்து விட்டு, தங்களை பற்றி அவர்கள் பெரிய அளவில் நினைத்து கொள்கின்றனர். அதனால் உண்மையான பணி புறக்கணிக்கப்படுகிறது. இதனை நீங்கள் தவிர்க்க வேண்டும். நமது பணி புறக்கணிக்கப்படவில்லை என்பதனை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என கூறினார்.

கொரோனா பாதிப்பு போன்ற காலத்தில் நல்ல முறையில் பணியாற்றி, காக்கி சீருடையில் இருந்த போலீசாரின் முகம் பொதுமக்களின் மனதில் நன்றாக பதிந்துள்ளது என்றும் அவர்களை பாராட்டி பேசினார். பணி தொடர்புடைய மனஅழுத்தத்தினை எதிர்கொள்ள யோகா உள்ளிட்டவைகளை மேற்கொள்ளும்படி ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!