கப்பல் தீயை அணைத்த படைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு!

நியூ டையமன்ட் கப்பலின் தீயை அணைக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ள இலங்கை கடற்படை, விமானப்படை, துறைமுக ஆணையம் மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இவ்வாறு நன்றிகளை தெரிவித்துள்ளார்.

அத்துடள் கடல் பல்லுயிரியலைப் பாதுகாப்பதில் அவர்கள் மேற்கொண்ட பணியை தான் பெரிதும் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தீயணைக்கப்பட்ட குறித்த கப்பல் இலங்கை கடற்பரப்பில் இருந்து 40 கடல் மைல் தூரத்திற்கு தள்ளிச் செல்லப்படுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!