பசிலுக்கு மனோ பச்சைக்கொடி!

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களை நாடாளுமன்றத்துக்குள் அனுமதிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்ட வரைவின் பல அம்சங்களை ஏற்றக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள அவர், ஆனாலும், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களை நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களை நடாளுமன்றத்துக்குள் வர அனுமதிப்பதில் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ள மனோ கணேசன், இது தான், தமது தலைமையிலான கூட்டணியின் நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த அரசாங்கத்தை தொலைவில் இருந்து இயக்கும் கருவியாக இருப்பதால் இவர் நாடாளுமன்றத்திற்கு வருவதில் தவறில்லை என்றும், அவர் வந்து அரசாங்கத்தை வெளிப்படையாகக் கட்டுப்படுத்தட்டும் என்றும் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!