கொரோனா பரிசோதனை செய்துகொள்ள எந்தவொரு பரிந்துரை சீட்டும் தேவையில்லை: மத்திய அரசு!

மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமலே இனி கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் , பயணிப்பவர்கள் என தேவைப்படுபவர்கள் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை அமைசகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. கடந்த 1 ஆம் தேதி முதல் 4 ஆம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் மருத்துவ பரிந்துரை சீட்டு இல்லாமல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!