நிபுணர் குழுவில் இடம்தர வேண்டும்! – ஜனாதிபதிக்கு மனோ கடிதம்

புதிய அரசியலமைப்பை வரையும் நிபுணர் குழுவில் மலையகத் தமிழர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு, அவர் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், வடக்கு, கிழக்கிற்கு வெளியெ வசிக்கும், இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவரையும் அரசியலமைப்பை உருவாக்கும் நிபுணர் குழுவில் உள்ளடக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!