உடனடியாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன்!

உடனடியாக நாடாளுமன்றத்துக்குள் நுழைகின்ற திட்டம் தம்மிடம் இல்லை என்று முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் எவரும் அதனை ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.பின்னர், 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்ற அடிப்படையில் தான் அவர்கள் அப்போது 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கினர் என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேலதிக அதிகாரங்களைப் பெறவுள்ளார் என்றும், அவரை ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்த்தன் மூலம், அதற்கான அதிகாரத்தை மக்கள் அவருக்கு வழங்கியுள்ளனர் என்றும் பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!