இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்-இராணுவதலைமையகம்

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களிற்கு அடைக்கலமளிப்பவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை இராணுவதலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் மற்றும் தொடர்ந்தும் விடுப்பில் இருப்பவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை நாடாளாவியரீதியில் இடம்பெறுவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்களிற்கு அடைக்கலம் அளிப்பதை அனைவரும் தவிர்த்துக்கொள்ளவேண்டும் அதேபோன்று அவர்களிற்கு உதவுவது மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்துவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் இராணுவ தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களில் ஒரு பிரிவினரும் விடுமுறையில் சென்றபின்னர் தலைமைறைவாகியுள்ள சிலரும் குற்றச்செயல்கள்,கொள்கைள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்ற தகவல் பொலிஸார் மூலம் கிடைத்துள்ளது எனவும் இராணுவ தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் சிலர் அரசியல்ரீதியாக செல்வாக்கு படைத்தவர்கள் மற்றும் மதகுருமார்களிடம் அடைக்கலம் பெற முனைந்துள்ளனர் எனவும் இராணுவதலைமையகம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!