வவுனியாவில் குளவி கொட்டி 3 வயது சிறுமி பலி- மேலும் மூவர் படுகாயம்.

வவுனியா- நொச்சிமோட்டை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 3 வயது சிறுமி உயிரழந்துள்ளார். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். நொச்சிமோட்டையில் உள்ள விவசாய காணியில் நேற்று மதியம் 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விவசாய காணியினை சுத்தம் செய்வதாக ஒரே குடும்பத்தினை சேர்ந்த தாயும் மகளும், இரு குழந்தைகளுடன் ம் சென்றுள்ளனர். காணியில் இருந்த மரம் ஒன்றினை வெட்டிய சமயத்தில் மரத்தினுள் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து குளவிகள் அவர்கள் நால்வர் மீதும் கொட்டியுள்ளது.

குளவிக்கொட்டுக்கு இலக்காகிய அவர்கள் அயலவர்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் தாய் (வயது- 61), மகள் (வயது-36) , மகளின் பிள்ளைகள் (வயது -03) , (வயது- 3மாதம்) ஆகியவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 3 வயது சிறுமி நேற்று மாலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படுகாயமடைந்த தாய், மகள், மகளின் 3மாத குழந்தை ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!