அட்டலுகமயில் பொலிஸார் மீது தாக்குதல்; நால்வர் காயம்!

களுத்துறை – பண்டாரகம, அட்டலுகம, மாராவ பிரதேசத்திற்கு போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது இன்று (09) காலை பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பொலிஸார் நால்வர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை பொலிஸ் நிலையம் நோக்கி அழைத்து செல்லும் போது பொலிஸ் ஜீப்பை வழிமறித்த பிரதேசவாசிகள் பொலிஸார் மீது கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!