சுண்டுக்குளியில் வீடு புகுந்து மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு!

யாழ்ப்பாணம் – சுண்டுக்குளி பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

சுண்டுக்குளி, குருசர் வீதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இன்று (11) அதிகாலை 1.40 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதோடு வீட்டின் கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டு வீட்டின் வாயில் கதவும் வாள்களால் வெட்டப்பட்டுள்ளன.

வீட்டில் அதிகாலை அனைவரும் உறக்கத்தில் இருந்த வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த போதிலும் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. மற்றைய மோட்டார் சைக்கிள் சிறியளவில் எரிந்துள்ளது.

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததன் காரணமாக வீடு முழுவதும் தீ பரவி வீட்டிருந்த தளபாடங்களும் எரிந்து நாசமாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!