20 மூலம் ஜனாதிபதிக்கு புதிய அதிகாரங்கள் கிடைக்காது!

20 ஆவது திருத்த சட்டமூலத்தின் மூலம் ஜனாதிபதிக்கு எவ்வித புதிய அதிகாரமும் வழங்கப்படாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக தற்காலிகத் தீர்வைத்தான் வழங்கவுள்ளது. இது ஒன்றும் புதிய விடயமல்ல.

ஜனாதிபதிக்கு இதன் ஊடாக புதிதாக எந்தவொரு அதிகாரமும் வராது என்றும் மாறாக, கடந்த கால ஜனாதிபதிகளுக்கு எந்த அதிகாரங்கள் இருந்தனவோ அவை தான் கிடைக்கும் .

இவை அனைத்தையும் மாற்றியமைத்து புதிய அரசியலமைப்பை கொண்டுவருவோம் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!