தலைமையைக் கைப்பற்றுவதே அடுத்த இலக்கு!

தனது அடுத்த இலக்கு கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவதே என ஐ.தே.க வின் பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ருவான் விஜேவர்தன தெரிவித்தார்

ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களை மீண்டும் எம்முடன் இணைந்து கட்சியை பலப்படுத்த நாம் சகலரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுப்போம். அனைத்து உறுப்பினர்களும் எனக்கு சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

எனவே வெகு விரைவில் கட்சியை மறுசீரமைத்து புதிய மாற்றங்களை செய்து மீண்டும் மக்களை சந்திப்போம். சகல தேர்தல்களிலும் நாம் மீண்டும் எமக்கான இடத்தை தக்கவைப்போம்.

கட்சியின் யாப்பிற்கு அமைய எவ்வாறு நகர வேண்டுமோ அதனை நான் செய்வேன். அடுத்ததாக தலைமைத்துவ மாற்றம் நிச்சயமாக இடம்பெறும். அதில் நானும் தலைமைத்துவ போட்டியில் இருப்பேன். ஐக்கிய தேசிய கட்சி இளம் தலைமைத்துவத்துடன் செயற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்றும் அவர் மேலும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!