விசா மோசடியில் ஈடுபட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்கள் நால்வர் நீக்கம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்கள் நால்வர் விசா மோசடியில் ஈடுபட்டதாக அந்நிறுவனம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை சேர்ந்த நான்கு ஊழியர்கள் விசா மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நான்கு ஊழியர்களதும் சேவை இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்த உழியர்கள் தற்போது சேவையில் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!