340 மில்லியன் ரூபா செலுத்தாமல் எரிந்த கப்பலை வெளியே கொண்டு செல்ல முடியாது!

கிழக்குக் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக செலவிடப்பட்ட 340 மில்லியன் ரூபா நட்டஈட்டை செலுத்துமாறு சட்டமா அதிபர் கப்பல் நிறுவனத்திடம் கோரியுள்ளார்.

நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும், அதற்கு வழங்கிய ஒத்துழைப்புகளைச் சுட்டிக்காட்டியும் கப்பலின் உரிமையாளர்களின் சட்டத்தரணிகளிடம் இந்த செலவு அறிக்கையை சட்டமா அதிபர் சமர்ப்பித்துள்ளார்.

இதேவேளை, இழப்பீட்டுத் தொகையை முழுமையாக செலுத்தும்வரை கப்பலை இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேற்றுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!