கிரிக்கெட்டா கொரோனாவா? – நாமல் தீர்மானிக்க வேண்டும் – மனோ

கிரிக்கெட்டா, கொரோனாவா என நாமல் தீர்மானிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டில் கொரோனா நோயாளரில் பெரும்பாலோர் வெளிநாடு சென்று வந்தோர். இந்நிலையில், இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நமது சுகாதார துறையின் 14 நாள் தனிமைபடுத்தல் பரிந்துரையை ஏற்க மறுக்கிறார்கள்.

ஆகவே விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச, கிரிக்கெட்டா, கொரோனாவா என தீர்மானிக்க வேண்டும்” – என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!