தனிக்கல்லு மக்களுக்கு வந்த சோதனை! – வயலுக்கு செல்ல உறுதி கேட்கும் இராணுவம்.

வவுனியா வடக்கு தனிக்கல்லு பிரதேசத்தில் தமது வயல் நிலங்களுக்கு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுப்பதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

“தனிக்கல்லு பகுதியில் அமைந்துள்ள எருக்கலம் பிலவு என்ற இடத்தில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்கள் நூறு வருடங்கள் பழமையானது. எமது விவசாய காணிகளிற்கு செல்வதற்கு இராணுவம் அனுமதி மறுக்கிறது. காணியின் உறுதியை தந்தபின்னர் காணிக்குள் இறங்குமாறு இராணுவத்தால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.

இதனால் இராணுவத்தின் கடுமையான நெருக்குவாரத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தனிக்கல்லு பகுதி மாத்திரம் இல்லாமல் எல்லைப்பகுதிகளில் உள்ள அனைத்து காணிகளிலும் இதேபிரச்சனை காணப்படுகின்றது.

எமது வயல்நிலத்தில் உள்ள சிறிய பற்றையை துப்புரவாக்குவதற்கு சென்றாலும் காணியின் உறுதியை பிரதி எடுத்து இராணுவத்திடம் கொடுத்தபின்னரே நாம் உள்ளே இறங்க அனுமதிக்கப்படுகின்றோம். எனவே இந்த நிலைமை மாற்றப்படவேண்டும்.” என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!